காரைக்கால், பிப்:19: காரைக்கால் சேத்தூர் கிராமத்தில், கோழி, ஆடு, மீ வளர்ப்பு மற்றும் தோட்டம் அமைப்பு உள்ளிட்ட, மகளிர் குழுக்களின் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் நிகழ்ச்சியை, புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார்.காரைக்கால் திருநள்ளாற்றை அடுத்த சேத்தூர் கிராமத்தில், அண்மையில் மகளிர் குழுவினர், அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதோடு, சேத்தூர் மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 4.5 ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்து, ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. அந்த இடத்தில், மகளிர் குழுக்கள் சார்பில், காய்கறி தோட்டம், தீவனப்புல் வளர்ப்பு, கோழி, ஆடு, மீன் வளர்ப்பு உள்ளிட்ட ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் வகையில், நிலம் சீரமைப்பு, குளம் வெட்டுதல் பணியை, புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார்.