கூடலூர், பிப். 19:கூடலூர் தனியார் தேயிலை தொழிலாளர் பிரச்ைனயை ஆய்வு செய்ய ரிசீவர் கமிட்டியை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. தோட்டநிர்வாகம், தொழிலாளர் என இருதரப்பினரின் கூட்டம் சென்னையில் 27ம் தேதி நடக்கிறதுஇதுகுறித்து ஏஐடியுசி தொழிற்சங்க நிர்வாகி பாலகிருஷ்ணன் கூறியதாவது:கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்ல மலை டிவிசனுக்குட்பட்ட சீபுரம் தேயிலைத் தோட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இங்கு பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் உள்ளிட்ட பணப் பயன்கள் வழங்கப்படாததால் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. கூடலூர் ஆர்டிஓ தனபால், தொழிலாளர் ஆணையர் அலுவலர் சிராஜூதீன் தலைமையில் பல சுற்று பேச்சு வார்த்தை நடந்தது. கடந்த 12-12-2007ல் நிர்வாகத்திற்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தொழிலாளர்களே தோட்டத்தை பராமரித்து தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் தங்களது சொந்த பணத்தில் தேயிலைத் தோட்டத்தை மேம்படுத்தினர். தோட்டம் சீரமைக்கப்பட்டதால் தேயிலைத் தோட்டத்தில் உற்பத்தி அதிகரித்தது. இந்தநிலையில் தோட்ட நிர்வாகம் தேயிலை தோட்டத்தை திருப்பி கேட்டுள்ளது. தொழிலாளர்கள் தரப்பில் தோட்டத்தை பராமரிக்க செலவு செய்த ரூ.25 லட்சத்தை திருப்பி தர கேட்டபோது அதற்கு மறுப்பு தெரிவித்த நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, ெதாழிலாளர்கள் மீது நியூ ஹோப் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதை விசாரித்த காவல்துறையினர் தவறான தகவல் என அறிவித்து புகாரை தள்ளுபடி செய்தனர்.