நாமக்கல், பிப்.17: நாமக்கல் ராமாவரம் புதூரில் சக்கரத்தாழ்வார், லட்சுமி ஹயக்ரீவர் கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஹயகிரீவர் சுவாமிக்கு சிறப்பு மகா யாகம் நடைபெற்று வருகிறது. அதன்படி, வரும் 19ம் தேதி(புதன்கிழமை)காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரை, பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி அபிவிருத்திக்காக, சுவாமிக்கு ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது. வரும் 20ம் தேதி காலை 8:30 மணி முதல் மகா யாகமும், தொடர்ந்து 11 மணி முதல் 12 மணி வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது.