உடுமலை,பிப்.17:தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய பேரவை கூட்டம் வி.வல்லக்குண்டாபுரத்தில், அதன் தலைவர் லட்சுமணசாமி தலைமையில் நடந்தது. சிபிஎம் ஒன்றிய செயலாளர் சசிகலா பேசினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமார் சிறப்புரையாற்றினார்.
சங்கத்தின் புதிய தலைவராக லட்சுமணசாமி, செயலாளராக ரங்கநாதன், பொருளாளராக தங்கவடிவேலன், துணைத்தலைவராக சுந்தர்ராஜ், துணைச் செயலாளராக ஸ்ரீதர், கமிட்டி உறுப்பினர்களாக வெங்கடேசன், காளிமுத்து, திருமலைசாமி, மோகனசுந்தரம், சரஸ்வதி, கனகராஜ், மாரிமுத்து, ஜெகதீசன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.