திருத்தணி, பிப்.17: திருத்தணி கோட்ட நெடுஞ்சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள புதர்களை அகற்ற பொதுமக்கள், வகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்தணி மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தின் கீழ் திருத்தணி நாகலாபுரம் சாலை, திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் முதல் திருவாலங்காடு வரை, அரக்கோணம் முதல் திருவாலங்காடு வழியாக நாராயணபுரம் கூட்டு சாலை வரை, திருத்தணி கன்னிகாபுரம் சாலை வழியாக குருவராஜப்பேட்டை வரை, திருத்தணி கரூர் சாலை வழியாக பொதட்டூர்பேட்டை செல்லும் சாலையில் உள்ள கிருஷ்ணசமுத்திரம் வரை, திருத்தணி தும்பி குளம் வழியாக நல்லாட்டூர் வரை, சென்னை-திருப்பதி சாலையில் உள்ள பொன்பாடி முதல் கொல்லகுப்பம் பூனிமாங்காடு வரை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.