பள்ளிப்பட்டு, பிப். 17: ஆர்.கே.பேட்டை அருகே கால்நடை கிளை நிலைய திறப்பு விழா நடந்தது.ஆர்.கே.பேட்டை அருகே ஜனகராஜகுப்பம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள, கால்நடை கிளை நிலைய திறப்பு விழா நடந்தது. அதில், திருத்தணி கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் டாக்டர் தாமோதரன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி வரவேற்றார். விழாவில், பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ பங்கேற்று கால்நடை கிளை நிலையத்தை திறந்து வைத்தார்.