புழல், பிப். 17: புழல் அருகே போதையில் சாலை தடுப்பு சுவரில் மோதி பால் வியாபாரி இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை புழல், திருவள்ளுவர் 2வது தெருவை சேர்ந்தவர் மணி (55). பால் வியாபாரம் செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இவருக்கு மனைவி நிர்மலா, மகன் மதன்குமார், மகள் சங்கீதா ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் பால் வியாபாரத்துக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.இதனால், அவரது மகன் மதன்குமார் மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே கதிர்வேடு பகுதியில் செம்பியம்-செங்குன்றம் சாலையில் ஒரு தனியார் வீட்டுமனைகளுக்கும் சாலைக்கும் இடையிலான இரும்பு தடுப்பு பகுதியில் மணி இறந்து கிடப்பதாக மதன்குமாருக்கு தகவல் கிடைத்தது.