ராஜபாளையம், பிப்.13: ராஜபாளையம் பி.ஏ.சி ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா நடந்தது. பி.ஏ.சி.ராமசாமிராஜா கல்வி நிறுவனங்களின் டிரஸ்டி என்.கே கண்டன் ராஜா தலைமையில் நடைபெற்றது. ராம்கோ குழும கல்வி தலைமை அதிகாரி டாக்டர் ஆர். வெங்கட்ராஜ் வரவேற்புரையாற்றினார். கல்லூரி ஆண்டு அறிக்கையை முதல்வர் (பொ) வீ. சீனிவாசன் சமர்ப்பித்தார். மாணவர் தலைவர் ஜோதிராமலிங்கம் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய மனிதவள துறை, இயக்குநர் டாக்டர் சுதீந்திரநாத் பாண்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றுகளும், பரிசுகளும் வழங்கி உரையாற்றினார்.