மரத்தில் தூக்கில் தொங்கிய பில்டிங் கான்ட்ராக்டர்

சாத்தூர், மே 15: கடன் தொல்லையால் பில்டிங் கான்ட்ராக்டர் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்தவர் திருச்சந்திரன்(44). இவர் கட்டிட பணிகளை குத்தகைக்கு எடுத்து செய்து வருகிறார். சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு பணியில் இருந்துள்ளார். இவருக்கு கடன் தொல்லை இருந்துள்ளது. இதனால் மன வேதனையில் இருந்தவர் நேற்று காலையில் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மனைவி முத்துமாரி கொடுத்த புகாரில் இருக்கன்குடி போலீசார வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post மரத்தில் தூக்கில் தொங்கிய பில்டிங் கான்ட்ராக்டர் appeared first on Dinakaran.

Related Stories: