பொள்ளாச்சி,பிப்.13: பொள்ளாச்சியை அடுத்த குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைகின்றனர். பொள்ளாச்சியை அடுத்த குரங்கு அருவி,டாப்சிலிப் உள்ளிட்ட சுற்றுலா பகுதிக்கு, கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். இதில் ஆழியாருக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாபயணிகள், குரங்கு அருவிக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். மழை இருக்கும் காலக்கட்டத்தில் அருவியில் தண்ணீர் அதிகளவில் வரும்போது, சுற்றுலா பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். ஆனால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையில்லாததால் குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குறைந்தது.