கரூர், பிப்.13: கரூர் தாந்தோணிமலை பஸ் நிறுத்தம் அருகே மினி பஸ்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்கள் எளிதில் செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. கரூர் தாந்தோணிமலை பஸ் நிறுத்தம் வழியாக கரூர் மாவட்ட பகுதிகள், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து கரூர் நோக்கி வரும் அனைத்து பேருந்துகளும் நின்று செல்கின்றன. மேலும், இந்த பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து, தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கரூர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக இந்த நிறுத்தத்தில் நின்று ஏறிச் செல்கின்றனர். இந்நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த நிறுத்தம் எப்போதும் வாகன நெருக்கடியுடன் காணப்பட்டு வருகிறது.