கொள்ளிடம்,பிப்.13: கொள்ளிடம் அருகே கற்பள்ளம் கிராமத்தில் அரசிடம் ஒப்படைக்கப்பட்ட உதவி பெறும் துவக்க பள்ளியை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கற்பள்ளம் கிராமத்தில் ராஜா உதவிபெறும் துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தற்பொழுது 80 மாணவர்கள் உள்ளனர். இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 1954ம் ஆண்டு கற்பள்ளம் கிராமத்தை சேர்ந்த இஸ்ரேல் என்பவர் தனது சொந்த இடத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் துவக்கி நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இந்த பள்ளி முறையாக கல்வித்துறையிடம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. விளையாட்டு திடலுக்காகவும், பள்ளி கட்டிடம் கூடுதலாக கட்டிக்கொள்வதற்காகவும், மேலும் கால் ஏக்கர் நிலம் கல்வித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசிடம் முறையாக ஒபப்டைக்கப்பட்ட இந்த பள்ளியின் கட்டிடம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.