செங்கம் ஒன்றியத்தில் டேங்க் ஆபரேட்டர், துப்புரவு பணியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

செங்கம், பிப்.12: செங்கம் ஒன்றியத்தில் டேங்க் ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நேற்று நடந்தது.செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று, ஒன்றியத்தில் பணிபுரியும் டேங்க் ஆப்ரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் விஜயராணி குமார் தலைமை தாங்கினார். துணை பிடிஓ அண்ணாமலை முன்னிலை வகித்தார். பிடிஓ நிர்மலா வரவேற்றார்.இதில், செங்கம் ஒன்றியத்தில் உள்ள 44 கிராம ஊராட்சிகளின் டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, டேங்க் ஆபரடே்டர்கள் சங்க புதிய தலைவராக சி.கிருஷ்ணமூர்த்தி (ஆண்டிபட்டி), செயலாளராக பி.முருகன்(குயிலம்), பொருளாளராக செல்வமணி(சென்னசமுத்திரம்), துணைத்தலைவராக முருகானந்தம்(பரமனந்தல்) தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஒன்றியக்குழு தலைவர் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் எம்எல்ஏ மு.பெ.கிரி மற்றும் பிடிஓக்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

Related Stories: