நடைவருவோர் கழக ஆண்டு விழா

தென்காசி, பிப். 12: மேலகரம் தென்பொதிகை நடை வருவோர் கழகத்தின் 12 வது ஆண்டு விழா நடந்தது. மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர் திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு தலைவர் ரெங்கநாதன் தலைமை வகித்தார். மூத்த குடிமக்கள் மன்ற தலைவர் துரை தம்புராஜ் வரவேற்றார். மன்னார் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் சுப்பிரமணியன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சுந்தர்சிங், இன்ஸ்பெக்டர் ஆடிவேல், டாக்டர் சுகன்யா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் ஏராளமான உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  கிருஷ்ண குமார் நன்றி கூறினார்.

Related Stories: