கடையம் அருகே பரபரப்பு சாலையில் நின்ற கன்டெய்னரில் பணமா?

கடையம், ஏப்.17:நெல்லை மாவட்டம் அம்பை வழியாக தென்காசிக்கு நேற்றிரவு கன்டெய்னர் லாரி ஒன்று சென்றது. ஆழ்வார்குறிச்சி சாலையோரம் இருந்த மரக்கிளையை ஒடித்து அங்குள்ள மின்வயர்களை அறுத்து தறிக்கட்டு ஓடியது. தொடர்ந்து லாரி கடையம் அருகே திருமலையப்பபுரம் வளைவு பகுதியில் வந்தபோது திடீரென டிரைவர் லாரியை நடுவழியில் நிறுத்திவிட்டு தப்பி சென்றார். இதனால் அரசு பேருந்துகள், மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கேரளாவிற்கு கனிம வளங்கள் ஏற்றி சென்ற லாரிகள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே கன்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக வந்த தகவலையடுத்து அப்பகுதியில் பொதுமக்கள் கூடினர். இதனால் இரவு நேரத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை ஒழுங்குபடுத்தினர். தொடர்ந்து லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். லாரி டிரைவரையும் தேடி வருகின்றனர்.

The post கடையம் அருகே பரபரப்பு சாலையில் நின்ற கன்டெய்னரில் பணமா? appeared first on Dinakaran.

Related Stories: