பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

தேனி, பிப்.12: கம்பம் நகரில் வீடற்ற நிலையில் வசிப்போருக்கு வீட்டுமனைப்பட்டா கேட்டு கம்பம் நகர புதிய தமிழகம் கட்சியினர் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய தமிழகம் கட்சியின் கம்பம் நகர நிர்வாகிகள் தேவேந்திரகண்ணன், தேவேந்திரபவுன்ராஜா, தேவேந்திர கார்த்திக் ஆகியோர் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் தேனி கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனைத்தொடர்ந்து நிர்வாகிகள் தேனி  கலெக்டர் பல்லவிபல்தேவிடம் கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவில், கம்பம் அம்பேத்கார் நகரில் மூன்று தலைமுறையாக சுமார் 450 தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். மிக ஏழ்மை நிலையிலும், வீடற்ற நிலையில் வசிக்கும், குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: