திருச்சி, பிப். 12: திருச்சி மலைக்கோட்டை மீனாட்சி சுந்தரம்பிள்ளை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி சீத்தாலட்சுமி (40). கடந்த 6 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்த இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுக்கு முன் சீத்தாலட்சுமி தாயார் உடல் நலம் சரியில்லாமல் இறந்தார். அதுமுதல் சீத்தாலட்சுமி, மனநிலை பாதிக்கப்பட்டார். இதுகுறித்து பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை.