திருவையாறு,பிப்.12: திருவையாறு அருகே கண்டியூரில் 2 இடங்களில் குழாய் உடைப்பால் சாலையில் குடிநீர் வீணாகி செல்கிறது. தஞ்சை மாநகராட்சிக்கு விளாங்குடி கொள்ளிடம் ஆற்றிலிருந்து குடிநீர்குழாய் மூலம் எடுத்து செல்லப்பட்டு மாநகராட்சி மக்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. இந்த குடிநீர்குழாய் கண்டியூர் பஸ்ஸ்டாப் மெயின்ரோட்டிலும், பெருமாள் கோயில் அருகே உள்ள அரசுப்பள்ளி முன்பும் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்கிறது. சாலையில் ஓடும் தண்ணீரில் கால்நடைகள் படுத்துக்கொண்டு தண்ணீர் குடிக்கின்றது. அந்த இடம் குட்டைபோல் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சாலையில் செல்லும் பொதுமக்கள் தண்ணீர்உடைப்பு எடுத்த குழாயில் கைகால் முகம் கழுவுகிறார்கள்.