க.பரமத்தி, பிப்.12: க.பரமத்தி ஊத்துபட்டி செல்லும் நெடுஞ்சாலையில் வெங்கடாபுரம் அருகே ஆபத்தான வலைவில் விபத்துகளை தடுக்க வேகத்தடைஅமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். க.பரமத்தி பேருந்து நிலையம் பகுதியில் இருந்து சூடாமணி அருகே ஊத்துபட்டி செல்லும் நெடுஞ்சாலையில் நடந்தை அருகே வெங்கடாபுரம் பிரிவு பேருந்து நிறுத்தம் உள்ளது. இதன் அருகே மிகவும் ஆபத்தான வலைவு உள்ளது. இந்த வழியாக அரசு பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள் மற்றும் பைக்குகள் என தினமும் ஏராளமான வாகனங்கள் செல்ல வேண்டி இடத்திற்கு சென்று திரும்புகின்றன. சில நேரங்களில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் வெவ்வேறு விபத்துகள் ஏற்பட்டு பலரும் காயமடைந்ததோடு இதுவரை விபத்துகளில் ஒருசிலர் உயிரிழந்துள்ளனர். எனவே இப்பகுதியில் ஏற்படும் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் பலனில்லை.