கரூர், பிப்.12: விளையாட்டு மைதானம் இரவுநேர பார் ஆவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் நகரின் மையப்பகுதியில் அமைந்தள்ளது திருவள்ளுவர் விளையாட்டு மைதானம். காலை நேரத்தில் நடைபயிற்சிக்காகவும், விளையாட்டு பயிற்சிக்காகவும் ஏராளமானோர் இந்த மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர். காலையில் விளையாட்டு மைதானமாக காட்சியளிக்கின்ற திருவள்ளுவர் விளையாட்டு மைதானம் இரவு நேரத்தில் திறந்தவெளி பாராக மாறிவிடுகிறது.