காரைக்கால், பிப்.12:காரைக்கால் எஸ்டிபிஐ கட்சி சார்பில், காரைக்கால் நிரவியில் குடியுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது
கூட்டத்திற்கு, நிரவி-திருமலைராயன்பட்டினம் தொகுதி தலைவர் சுல்தான் கெவுஸ் தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் ஹாஜா நஜ்முதீன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில், மாவட்ட செயலாளர் முகமது பிலால் மற்றும் நிர்வாகிகள் அப்துல் சலாம், பதுருதீன், சிராஜ், மஸ்தான் மரைக்காயர் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.