நாகை,பிப்.12: ஊர் காவல்படை பணியில் சேருவோர்கள் தன்னார்வத்துடன் பணியாற்ற வேண்டும் என்று எஸ்பி செல்வநாகரத்தினம் கூறினார். நாகை ஆயுதப்படை மைதானத்தில் ஊர் காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் முகாம் நடந்தது. தேர்வு குழுத்தலைவராக ஏடிஎஸ்பி முருகேசன் செயல்பட்டார். உறுப்பினர்களாக ஊர் காவல்படை மண்டல தளபதி ஆனந்த், ஆயுதப்படை பிரிவு டிஎஸ்பி திருவேங்கடம் ஆகியோர் செயல்பட்டனர். நாகை மாவட்டத்தில் காலியாக உள்ள 78 ஆண்கள், 11 பெண்கள் பணியிடங்களுக்கு 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்டவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இதை தொடர்ந்து உயரம், எடையளவு, மார்பளவு உள்ளிட்ட உடல் தகுதிகள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். எஸ்பி செல்வநாகரத்தினம் தொடங்கி வைத்து பேசியதாவது: ஊர் காவல் படை காவல்துறையின் ஒரு அங்கம்.