திங்கள்சந்தை, பிப்.12:இரணியல் அருகே உள்ள கண்டன்விளை மடவிளாகம் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் வாலிபர் ஒருவர் பிறந்து சில நாட்களே ஆன கைக்குழந்தையுடன் சுற்றி திரிந்தார். குழந்தை தொடர்ந்து அழுதுக்கொண்டே இருந்தது. இதனால் அவர் குழந்தையை கடத்தி வந்திருப்பதாக அவர் மீது சந்தேகமடைந்த ெபாதுமக்கள் இது குறித்து இரணியல் ேபாலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்த விசாரித்தனர். விசாரணையில், அவர் தனது பெயர் அப்துல் ரசாக் என்றும், தனது சொந்த ஊர் திருவிதாங்கோடு. சகோதரி வீடு மணவாளக்குறிச்சியில் உள்ளது. இந்த குழந்தை எனது குழந்தைதான். குழந்தையை சகோதரி வீட்டில் விட ெகாண்டு சென்றேன். அவர் வீட்டில் இல்லாததால் திரும்பி வந்தேன் என கூறினார். அவர் கூறியபடி திருவிதாங்கோடு மற்றும் மணவாளக்குறிச்சியில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உறவினர்கள் வந்து குழந்தை அவரது குழந்தைதான் என்பதை உறுதி செய்தனர்.