திருவள்ளூர், பிப். 12 : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றிய அலுவலக வளாகங்களிலும், வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பயிர்களின் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு, விவசாயிகளுக்கு தேவையான விதைகள் மற்றும் இதர இடுபொருட்களை வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்யும் பணிகள் நடைபெறுகிறது. மேலும், அயம்வாம் திட்டத்தின்கீழ் செயல்விளக்க திடல்கள் அமைத்தல் மற்றும் நீர் மேலாண்மை யுக்திகள் செயல்படுத்துதல், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம், சிறு மற்றும் குறு விவசாயிகளிடையே கூட்டு பண்ணைய ஆர்வத்தை ஊக்குவித்தல், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்தல் ஆகியவையும் செயல்படுத்தப்படுகிறது.