விபத்தில் 2 பேர் சாவு

கோவை, பிப்.11:கோவை பீளமேடு சேரன் நகரை சேர்ந்தவர் செல்வம். இவர் மகன் பிரசன்னகுமார் (18). பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன் தினம் இவர் பள்ளியில் நடந்த விழாவிற்கு சென்று விட்டு காந்திபுரத்தில் இருந்து வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இவருடன் நண்பர் விக்னேஷ் (18) என்பவர் மொபட்டில் சென்றார். காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே மொபட் மீது பஸ் மோதியது. இதில் பிரசன்னகுமார் காயமடைந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். விக்னேஷ் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். மாநகர போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.  கோவை கந்தே கவுண்டன் சாவடி அருகேயுள்ள காமராஜர் வீதியை சேர்ந்த சந்திரன் என்பவர் மனைவி துளசியம்மாள் (50). இவர் கணவர் சந்திரன், பேத்தி யாழினி (6) ஆகியோருடன் முருகன் கோயிலில் தைப்பூச விழாவிற்கு சென்று விட்டு பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திருமலையம்பாளையம் பிரிவில் அவ்வழியாக வந்த கார் மோதியது. இதில் காயமடைந்த துளசியம்மாள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இறந்தார். சந்திரன், யாழினி சிகிச்சை பெற்று வருகின்றனர். க.க.சாவடி போலீசார் விசாரிக்கின்றனர்

Related Stories: