வேலாடிபட்டி ஐயனார் கோயில் கும்பாபிஷேகம்

கந்தர்வகோட்டை, பிப். 7: கந்தர்வகோட்டை தாலுகா அண்டனூர் வட்டம் வேலாடிப்பட்டி ஐயனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த 3ம் தேதி முதல்கால பூஜை துவங்கியது. இந்நிலையில் நேற்று காலை கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: