பொதுமக்கள் மகிழ்ச்சி விராலிமலை அருகே வெயில் உக்கிரத்தால் மயங்கி விழுந்து முதியவர் பலி

விராலிமலை, மே 14: விராலிமலை அருகே வெயிலின் தாக்கத்தால் முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார் விராலிமலை அருகே உள்ள விருதாபட்டியை சேர்ந்தவர் கணேசன் (65) முதியவரான அவர் விருதாபட்டி அருகே உள்ள செட்டியபட்டி ஊராட்சி மன்ற டிவி அறை அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது வாட்டி வதைத்த வெயிலால் மயங்கி விழுந்து உயிரிழந்து உள்ளார். இது குறித்து அவரது உறவினர் தங்கராஜ் அளித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post பொதுமக்கள் மகிழ்ச்சி விராலிமலை அருகே வெயில் உக்கிரத்தால் மயங்கி விழுந்து முதியவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: