கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு

கந்தர்வகோட்டை, மே 12: கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் விழுந்த ஆட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் சுந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் என்பவரது ஆடு அந்தப் பகுதியில் உள்ள வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்தது. இது பற்றி கந்தர்வ கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் நிலைய அலுவலர் அப்துல்ரகுமான் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிறு மூலமாக கிணற்றில் இறங்கி ஆட்டினை உயிருடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். ஆட்டினை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி கிராம மக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

The post கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: