அருமனை, பிப். 6: அருமனை அருகே பூட்டிய வீட்டில், அமர்ந்த நிலையில் தொழிலாளி சடலம் மீட்கப்பட்டது. அருமனை அருகே கடையால் அரகநாடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (40). கூலித்தொழிலாளி. இவரது பெற்றோர் தற்போது உயிருடன் இல்லை. இதனால் நாகராஜன் தனியாக வசித்து வந்தார். கூலி வேலைக்கு சென்று கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டி வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நாகராஜன் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில தினங்களாக அவர் வெளியே வரவில்லை. வீடும் பூட்டிய நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் நேற்றுமுன்தினம் இதுகுறித்து கடையாலுமூடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் விரைந்துவந்து கதவை தட்டி நாகராஜனை அழைத்தனர்.