தக்கலை அருகே சகோதரர் மனைவியை தாக்கியவர் கைது

குமாரபுரம், ேம 10: தக்கலை அருகே உள்ள மருதூர்குறிச்சி வலியவிளை பகுதியை சேர்ந்தவர் அனுரால்டு சேம். இவர், தனக்கு கிடைத்த குடும்ப சொத்தை அவரது மனைவி ஷைஜூ (36) என்பவருக்கு எழுதிவைத்து உள்ளார். இது தொடர்பாக அனுரால்டுசேம், அவரது சகோதரர் பள்ளியாடி கீழமிலாவிளையை சேர்ந்த அர்னால்டு சேம் (43) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் அர்னால்டு சேம், ஷைஜூ என்பவரது நிலத்தில் உள்ள ரப்பர் மரத்தை வெட்டி சேதப்படுத்தி உள்ளார். இது குறித்து ஷைஜூ, அர்னால்டு சேமிடம் தட்டிக்கேட்டார். ஆத்திரம் அடைந்த அர்னால்டுசேம், ஷைஜூவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து ஷைஜூ தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் அர்னால்டுசேம் மீது 5 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது ெசய்தனர்.

The post தக்கலை அருகே சகோதரர் மனைவியை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: