முசிறி, பிப்.4: முசிறி-குளித்தலை இணைக்கும் பெரியார் பாலத்தில் விழும் நிலையில் உள்ள ஆபத்தான மின்கம்பத்தால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்தில் கடந்து சென்று வருகின்றனர். முசிறியில் இருந்து குளித்தலைக்கு செல்வதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே பெரியார் பாலம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த பாலத்தில் மின்விளக்கு வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம் ஒன்று வாகனம் மோதியதில் வளைந்து உடைந்த நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. பாலத்தின் வழியே செல்வோர் மீது இந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்தால் உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.