திருத்தணி, ஜன. 31: திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதிய மழை இல்லாததாலும், கடும் பனி பொழிவினாலும் விளை நிலங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதிய அளவிற்கு மழை இல்லை. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல், கரும்பு உள்ளிட்ட எந்த பயிர்களையும் பயிரிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் விவசாய நிலங்களை தரிசாக விட முடியாமல் தவிப்புக்கு உள்ளான விவசாயிகள் தங்களது நிலங்களுக்காக கடன் பெற்று உழவு செய்து மானாவாரி பயிர்களான எள், பச்சைப்பயிறு, உளுந்து போன்ற பயிர்களை நூற்றுக்கணக்கான ஏக்கரில் தண்ணீர் வசதியில்லாத நிலையில் விதைத்தனர். கடந்த ஒரு மாத காலமாக பயிர்கள் நன்றாக வளர்ந்தபோது திடீரென தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிரது. இந்த நிலை திருத்தணி, திருவாலங்காடு ஆகிய பகுதிகளில் அதிக அளவில் இருந்து வருகிறது.