அரக்கோணம், ஜன.30: ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 80 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், ஒரு சில கடைகளில் விற்பனை செய்து வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இதையடுத்து, எஸ்பி மயில்வாகனன் உத்தரவின்பேரில், டிஎஸ்பி மனோகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, வெங்கடேசன், பாரதி, லட்சுமிபதி, சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் நேற்று அதிரடியாக அரக்கோணம் சப்-டிவிஷன் முழுவதும் உள்ள பல்வேறு பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினர்.