ஜோலார்பேட்டை, ஜன.30:ஜோலார்பேட்டை அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஜோலார்பேட்டை அடுத்த ஆண்ணான்டப்பட்டி பகுதியை சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராகுல்(28) என்பவர் அத்துமீறி வீட்டிற்கு நுழைந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அந்த பெண் கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தில் ஓடிவந்தனர். அதனை பார்த்த ராகுல் கத்தியைக் காட்டி அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அப்பெண்ணின் கணவர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.