சேலம், ஜன.30: ஆத்தூர் அருகே மஞ்சினியில் மஞ்சினி ஊராட்சி மற்றும் மதுரை தானம் களஞ்சியம் அறக்கட்டளையின் சார்பில், வளர் இளம்பெண்கள் மேம்பாடு சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மஞ்சினி ஊராட்சி மன்றத் தலைவர் இசையழகன் தலைமை வகித்தார். ஓமலூர் பொறுப்பாளர் அலெக்ஸ் பாண்டியன் வரவேற்றார். பைத்தூர் தலைவர் கலைச்செல்வி சிவகுமார், வளையமாதேவி தலைவர் வரதராஜன் ஆகியோர் பேசினர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனிவேல், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வன் ஆகியோர், பெண்களின் முன்னேற்றம் குறித்து விளக்கி பேசினர். வளர் இளம்பெண்களின் தன் சுத்தம் குறித்து சரண்யா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சங்கீதா, குழந்தைகள் மற்றும் பெண்களின் உரிமைகள்- அரசு வழங்கும் சேவைகள், கணினி செயலிகள் குறித்து கெஜலட்சுமி ஆகியோர் விளக்கி பேசினர்.