கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஓசூர், ஜன.29:கிருஷ்ணகிரி மாவட்ட ஆர்ய வைஸ்ய மகா சபையின் மகளிர் சங்கம் சார்பில் வாசவி அம்மன் அக்னி பிரவேஷ தின நிகழ்ச்சிகள் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் பட்டாடை உடுத்தி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கன்னிகா பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் மகளிர் குழுவினர் 102 தீபங்கள் ஏற்றி அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சியில் மாணவி அஷ்சயலட்சுமி, வாசவி அம்மன் வேடமணிந்து சொற்பொழிவாற்றினார். இதில் வாசவி மகளிர் சங்க தலைவி சரோஜாபாபு உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: