கரூர், ஜன. 28: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், மற்றுறுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனை, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை புதிய குடும்பஅட்டை, கல்விக்கடன், தொழில்கடன், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 205 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். முதல்வரின் தனிப்பிரிவு, பல்வேறு முகாம்களில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களின் மீது காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.