கோவை, ஜன. 28: கோவை பெட்ரோல் பங்கில் பெண்கள் உடை மாற்றும் அறையில் வீடிேயா எடுக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தனது கணவரை விடுதலை செய்ய வேண்டும் அல்லது தன்னை கருணை கொலை செய்ய வேண்டும் என அவரது மனைவி, கலெக்டரிடம் மனு அளித்தார்.கோவை மாநகர் சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் கம்பெனிக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் ஏராளமான பெண்கள் வேலை செய்கின்றனர்.
அவர்கள் வேலை முடிந்து செல்லும்போது உடை மாற்றுவது வழக்கம். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த அறையில் பெண்கள் உடை மாற்றுவதை ரகசியமாக தனது செல்போன் கேமராவை வைத்து படம் பிடிக்கப்பட்டது. இந்த செயலில் பங்கில் பணியாற்றிய சுபாஷ் என்பவர் ஈடுபட்டார். மேலும், இதை ரகசியமாக தனது செல்போனுக்கு அங்கு பணிபுரிந்த மணிகண்டன் என்பவர் மாற்றிக் கொண்டார். பின்னர், அதனை மருதாசலம் என்பவர் உதவியுடன் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பரவ விட்டுள்ளனர்.இது தொடர்பாக சாய்பாபா காலனி போலீசில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரிலும், கோவை மாநகர ஆணையர் சுமித் சரண் உத்தரவின் பேரிலும், மணிகண்டன், சுபாஷ் மற்றும் மருதாசலம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.