பூந்தமல்லி, ஜன. 28: பூந்தமல்லியில் சப்-இன்ஸ்பெக்டர் மகள் திருமண நிகழ்ச்சியில் 40 சவரன் நகை, ஒரு லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அண்ணாநகர் அருகே உள்ள பாடிபுதுநகர் 18வது தெருவை சேர்ந்தவர் தங்கச்சாமி (57). கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் பிரதிபா பிரியதர்சினிக்கும், அய்யப்பன்தாங்கலை சேர்ந்த ஜெயகுமார் என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. இதற்கான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லி, குமணன்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு உறவினர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
பின்னர் இரவு மணப்பெண், தனது அறைக்கு சென்றபோது மணப்பெண் அறையில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு அங்கு வைத்திருந்த தங்க நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்று இருப்பது தெரியவந்தது.