கல்லிடைக்குறிச்சி வாலிபர் 2வது திருமணம் உடந்தையாக இருந்த சகோதரி கைது

அம்பை, ஜன. 24:  கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (35). கூலி தொழிலாளியான இவருக்கும், உறவினரான வீரவநல்லூர் அடுத்த கூனியூர் மாலதி(33) என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மாலதி, கணவரை பிரிந்து குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆனந்த், முதல் திருமணத்தை மறைத்து கூனியூரை சேர்ந்த செல்வி(40) என்பவரை கடந்த 2016ல் திருமணம் செய்தார். இதற்கு ஆனந்தின் சகோதரியான பொட்டலை சேர்ந்த கண்ணன் மனைவி மல்லிகா(34), அவரது கணவர் கண்ணன் (45) மற்றும் உறவினர்கள் கார்த்திகா, முருகன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மாலதி, அம்பை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி ஆனந்த் மற்றும் 2வது மனைவி செல்வி(40) ஆகியோரை கடந்த 2016ல் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, அம்பை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் தொடர்புடைய மல்லிகா, அவரது கணவர் கண்ணன், உறவினர்கள் கார்த்திகா, முருகன் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே அம்பை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ராதாவிற்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து பொட்டல் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு வந்த மல்லிகாவை நேற்று கைது செய்தார். தொடர்ந்து தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருகிறார்.

Related Stories: