திருவள்ளூர், ஜன. 24: திருவள்ளூர் உட்பட தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் பிரதிநிதிகளின் பதவியிடங்கள் காலியாக இருந்தன. அக்கால கட்டத்தில் சிறப்பு அலுவலர்கள் மூலம் கிராமசபை கூட்டங்கள் நடந்தது. உள்ளூர் பிரச்னைகளின் முக்கியத்துவம் அலுவலருக்கு தெரியாததால் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தொய்வு ஏற்பட்டது. தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்கள் பதவியேற்றுள்ளனர். இத்தேர்தலில் 50 சதவீத பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், 50 சதவீதத்துக்கும் அதிகமான ஊராட்சிகளில் பெண் தலைவர்களே உள்ளனர். இந்த ஊராட்சிகளில் குடியரசு தினமான ஜன.26 ம் தேதி, முதல் கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. வழக்கமாக பெண் தலைவர்கள் போர்வையில் அவர்களது கணவர், உறவினர்களே ஊராட்சி நிர்வாகத்தில் தலையீடு இருக்கும்.
இது பெண்களுக்கான இட ஒதுக்கீடு தத்துவத்தையே கேள்விக்குறியாக்கி வந்தது.