கெங்கவல்லி அருகே மரத்தில் பைக் மோதி வாலிபர் பலி

கெங்கவல்லி, ஜன.23:  கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மட்டப்பாறை பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் முத்துசாமி(29). இவர் நெல் அறுவடை இயந்திரம் வைத்துள்ளார். அந்த நெல் அறுவடை இயந்திரத்திற்கு டிரைவரை பார்ப்பதற்காக, சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதிக்கு வந்து விட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒதியத்தூர்கேட் வளைவு பகுதியில் வேகமாக வளைந்த போது, எதிர்பாராவிதமாக புளியமரத்தில் பைக் மோதி, முத்துசாமி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே முத்துசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: