குற்றாலத்தில் விவேகானந்தர் ஜெயந்தி

தென்காசி, ஜன.23: குற்றாலத்தில் நகர பாஜ சார்பில் சுவாமி விவேகானந்தரின் 158வது ஜெயந்தி முன்னிட்டு ஐந்தருவி ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு நகர தலைவர் திருமுருகன் தலைமை வகித்தார். நகர பொது செயலாளர் பிலவேந்திரன், செந்தூர்பாண்டியன், முத்துப்பாண்டியன், நாகராஜன், பாலகணேசன், மாவட்ட எஸ்.சி.அணி பொது செயலாளர் மகேஷ்வரன், மேலகரம் மாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: