மானூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இல்ல திருமண விழா

நெல்லை, ஜன. 23: மானூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், கங்கைகொண்டான் முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான அருள்மணி மகன் பிரபாகர்- கவிதா திருமண விழா தாழையூத்தில் விமரிசையாக நடந்தது.  தலைமை வகித்த திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா எம்.பி. திருமணத்தை நடத்திவைத்தார். எம்.எல்.ஏ.க்கள் டிபிஎம் மைதீன்கான், ஏஎல்எஸ் லட்சுமணன், பூங்கோதை, சண்முகையா, ஞானதிரவியம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் வக்கீல் துரை வரவேற்றார். மாவட்டச் செயலாளர்கள் கிழக்கு ஆவுடையப்பன், மேற்கு சிவபத்மநாபன், மத்திய மாவட்டம் அப்துல் வகாப், மாவட்ட அவைத்தலைவர் சுபசீத்தாராமன், முன்னாள் எம்.பி. தங்கவேலு, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் முத்துப்பாண்டி, வில் பவர் சொல்யூஷன் நிறுவனர் எழில்வாணன்,  நெசவாளர் அணி மாநில துணை அமைப்பாளர் பெருமாள், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை அமைப்பாளர் சுப்பிரமணியன், முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம், சங்கர்நகர் பேரூராட்சி முன்னாள் சேர்மன் பேச்சிபாண்டியன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஆ.க. மணி, கண்ணன், மாவட்ட பொருளாளர் அருண் குமார், பகுதி செயலாளர்கள் சுப்பிரமணியன், கோபி, அப்துல் கையூம், அண்ணாதுரை,  விவசாய அணி  மாவட்டச் செயலாளர் பொன்னையா பாண்டியன், டாக்டர் ரவிமுருகன், ஆசிரியர் பிரபாகரன், இளைஞர் அணி செயலாளர்கள் வில்சன் மணித்துரை, செல்லத்துரை, கேகே கருப்பசாமி, ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அணியினர், தொழிலதிபர்கள் வாழ்த்திப் பேசினர்.  பாலாமடை ஊராட்சி கிளைச் செயலாளர் செண்டு, கலைஞரின் முரட்டு பக்தர் தொப்பி மைதீன் நன்றி கூறினார்.

Related Stories: