குன்னூர்,ஜன.22: குன்னூர் நகராட்சிக்கு சொந்தமாக டிடிகே சாலையில் ஆடு, மாடு வதை செய்யும் கூடம் உள்ளது. இந்த கூடம் சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இங்கிருந்தே குன்னூர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் இறைச்சி விற்பனைக்கு அனுப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டு ஆடுகள் வதை செய்ய புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது அந்த கட்டிடம் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. பாழடைந்த கட்டிடம் போல் காட்சியளிக்கும் இந்த வதைக்கூடத்தில் இருந்து இறைச்சி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.