திருத்தணி, ஜன.22: திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெயர்கள் இல்லாத வழிக்காட்டி பலகைகள் ஆங்காங்கே உள்ளது. அந்த பகுதிக்கு வரும் வௌியூர் வாசிகள் வழித்தெரியாமல் அவதிப்படுகின்றனர். திருத்தணி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் மா.பொ.சி சாலை, காந்தி ரோடு, கலைஞர் நகர், முருகப்பா நகர், எம். ஜி.ஆர் நகர், ராஜீவ் காந்தி நகர் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் இரும்பு தகடால் ஆன பெயர் பலகைகள் வைக்கப்பட்டது. இதனால் புதிதாக வரும் வௌியூர் வாசிகள் பெயர்ப்பலகை கண்டு தங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு எளிதில் சென்று வந்தனர்.