வஉசி தெருவில் சாக்கடை வடிகாலில் அதிகளவு தேக்கம் சாலையில் கழிவு நீர் வழிந்தோடும் அவலம்

கரூர், ஜன. 22: கரூர் வஉசி தெரு சாக்கடை வடிகாலில் அதிகளவு சாக்கடை தேக்கம் காரணமாக, வடிகாலில் இருந்து சாக்கடை கழிவுகள் வெளியேறுவது குறித்து பார்வையிட்டு சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மில்கேட் அருகே வஉசி தெரு உள்ளது. ஏராளமான குடியிருப்புகளும், தனியார் நிறுவனங்களும் இந்த பகுதியில் உள்ளன. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக, இதனை சுற்றிலும் உள்ள சில பகுதிகளில் வடிகால் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் வஉசி தெரு சாக்கடை வடிகாலில் அதிகளவு கழிவுகள் தேங்கி செல்ல வழியின்றி சாலையில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக, இந்த பகுதி முழுதும் கடும் துர்நாற்றம் உட்பட பல்வேறு சீர்கேடுகள் ஏற்பட்டு வருகின்றன. பெரியளவில் பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பு இதனை கண்டறிந்து அடைப்பினை சீர் செய்து, கழிவுகள் எளிதாக செல்ல தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: