புதுக்கோட்டை, ஜன.21: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிவாயு உருளை நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (புதன்கிழமை) மாலை 4.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன் தலைமையில் நடைபெற உள்ளது.