தென்னம்பாளையம் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

திருப்பூர், ஜன. 20:தை மாதம் பிறந்ததையொட்டி திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க நேற்று பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.திருப்பூர் பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் பகுதியில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு சுற்றவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து மீன்களை வாங்கி செல்வார்கள். கடந்த மாதம் மார்கழி மாதம் என்பதால் பெரும்பாலான பொதுமக்கள் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை சாப்பிட்டு வந்தனர். இதனால் மார்க்கெட்டில் மீன் விற்பனை மந்தமானதுடன் அவ்வப்போது வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை முதல் தை மாதம் பிறந்தது. இதனால் தை மாதத்தின் முதல் ஞாயிற்று கிழமையான நேற்று மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதில் கட்லா, ரோகு, நெய் மீன், கெழுத்தி மீன், வஜ்ர மீன் உள்ளிடவைகளை விரும்பி வாங்கி சென்றனர்.

Related Stories: