பேரணாம்பட்டு, ஜன.20: பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தில் உள்ள மையத்தில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் தலைமை தாங்கி சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். அப்போது வட்டார மருத்துவ அலுவலர் கலைச்செல்வி மருத்துவ அலுவலர் சிவக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர். இதேபோல், நகராட்சியில் அமைக்கப்பட்ட 31 மையங்களிலும் சுமார் 6 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.